Month: August 2024

ஆசிய ஆயர் பேரவை மாநாடு

இவ்வருடம் அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவுள்ள கூட்டொருங்கியக்க ஆயர் பேரவையின் இரண்டாவது அமர்வுக்கான ஆயத்த செயற்பாடுகளில் ஒன்றாக முன்னெடுக்கப்பட்ட ஆசிய ஆயர் பேரவை மாநாடு இம்மாதம் ஐந்தாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்கொக் நகரில் நடைபெற்றது.…

கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு

கிளறேசியன் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்திலுள்ள கிளறேசியன் சிறிய குருமடத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேரருட்தந்தை பிராயன் உடக்குவே அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து…

ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஆலய குவிமாட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குவிமாட திறப்புவிழாவும் புதிய பலிப்பீடம் ஆசீர்வதிக்கும் சடங்கும் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றன. அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கை நாட்டின் நீதியமைச்சர் கௌரவ விஜயதாஸ ராஜபக்சஅவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கூட்டம்

யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட குருக்களுக்கான கூட்டம் கடந்த மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…