Month: August 2024

இரத்ததான முகாம்

இளவாலை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

பீடப்பணியாளர் மாத சிறப்பு நிகழ்வுகள்

புங்குடுதீவு பங்கில் அனுஸ்ரிக்கப்படும் பீடப்பணியாளர் மாதத்தை சிறப்பித்து பீடப்பாணியார்களால் அங்கு பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தை நிகழ்வும், விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன்…

அமலமரித் தியாகிகள் யாழ்.மாகாண குருக்களுக்கான வருடாந்த தியானம்

அமலமரித் தியாகிகள் யாழ்.மாகாண குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலும் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் இம்மாதம்…

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட…

யாழ். புனித மரியன்னை பேராலய திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி திங்கட்கிழமை செபமாலை பேரணியும் 14ஆம்…