Month: August 2024

கிளிநொச்சி இரணைமடு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

கிளிநொச்சி இரணைமடு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்…

சொறிக்கல்முனை செபஸ்தியார்புரம் புனித செபஸ்ரியார் சிற்றாலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட செபஸ்தியார்புரம் புனித செபஸ்ரியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநர்

மன்னார் மறைமாவட்டம் கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநராக அருட்தந்தை லக்ஸ்ரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர்…

ஜனாதிபதி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற…

மறையாசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சி நிறைவுநாள் நிகழ்வு

வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி நிறைவுநாள் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிமை இன்று மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது. வதிவிடப்பயிற்சி இணைப்பாளரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வருமான…