Month: September 2023

கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு

கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில் புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றாஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பீடப்பணியாளர்களுக்கான கருத்துரைகள், தீப்பாசறை, திருப்பலி மற்றும்…

வன்னி கரித்தாஸ் கியுடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் போசாக்கு உணவு வழங்கல் செயற்பாடுகள்

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சிறுவர்களுக்கான போசாக்கு மற்றும் நல்வாழ்வு செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 கிராமங்களும் ஒரு…

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்சகோதரி யூட்சலா அவர்களின் உதவியுடன் புனித அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட…

கத்தோலிக்க தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு

கத்தோலிக்க தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம்

இந்தியா தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து இவர் பெற்றுக்கொண்டதுடன்…