Month: March 2022

தவக்கால யாத்திரை – புங்குடுதீவு பங்கு

தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இறைமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு

யாழ் புனித மரியன்னை பேராலய பங்கிலுள்ள பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற ஆயத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு

யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற ஆயத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமடு அன்னை திருத்தலத்தில் இடம்பெற்றது.

ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இல்ல மெய்வன்மைப் போட்டி

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இல்ல மெய்வன்மைப் போட்டி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் அங்கு நடைபெற்றது.

நெடுந்தீவு பங்கிற்குட்பட்ட கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நெடுந்தீவு பங்கிற்குட்பட்ட கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 26ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.