Month: March 2022

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மண்டைதீவு மகா வித்தியால பாடசாலையில் நடைபெற்றது.

மூதாளர்களை சந்திக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டப் பங்கிலுள்ள புனித வின்சன் டி போல் சபையின் கிறிஸ்து அரசர் பந்தி உறுப்பினர்கள் கொழும்புத்துறை புனித சூசையப்பர் மூதாளர் இல்லத்திற்கு சென்று அங்கு வாழ்ந்துவரும் வயோதிபர்களுடனான சந்திப்பொன்றை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு

இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு நிகழ்வும் 2021 ஆம் கல்வியாண்டு செயற்பாட்டை முடித்துக்கொண்டு தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் – மாதகல்

மாதகல் புனித தோமையார் ஆலய புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை – பலாலி ஊறணி பங்கு

பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள பலாலி ஊறணி பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.