Month: March 2022

புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினரின் தமிழ் விழா

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்ரம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம்

போர்டோவின் திருக்குடும்ப துறவற சபையினரின் யாழ். மாகாணத்தின் 17 வது பொதுச்சங்கம் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை இளவாலை திருக்குடும்ப கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது.

அன்னை மரியாவின் களங்கமில்லாத திரு இதயத்திற்கு அர்ப்பணித்து செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு

உலகநாடுகள் அனைத்தையும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஸ்யா நாடுகளை அன்னை மரியாவின் களங்கமில்லாத திரு இதயத்திற்கு அர்ப்பணித்து செபிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து மறைமாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 19ஆம் 26ஆம் திகதிகளில் நடைபெற்றது.