Month: February 2022

மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறை

முழங்காவில் பங்கிலுள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும், மறை ஆசிரியர்களுக்கான பாட ஆயத்தங்கள், கற்பித்தல் தொடர்பான கருத்தமர்வும் 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரணை மாதா ஆலயத்தில் நடைபெற்றது.

அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையினர் நூற்றாண்டு விழா

இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி வரும் அப்போஸ்தலிக்க கார்மேல் துறவற சபையினர் இலங்கையின் தமது பணியை ஆரம்பித்ததன் நூற்றாண்டு விழாவை 5ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினர்.

மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனர் யாழ் மறை மாவட்டத்திற்கு வருகை

மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குனர் அருட்திரு பசில் றொகான் அவர்கள் திருப்பாலத்துவசபை தினத்தை தேசியரீதியில் சிறப்பிக்குமுகமாக யாழ் மறை மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தார்.

யாழ் திருக்குடும்ப கன்னியர்மட முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வு

யாழ் திருக்குடும்ப கன்னியர்மட முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வு 09ம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது.

இளையோருக்கான ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கு

வன்னி கியுடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கு 6ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.