Month: January 2022

அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள்

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் வைத்து இலங்கை அரச படையினரால் 1985ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அருட்திரு மேரி பஸ்ரியன் அவர்களின் நினைவுநாள் 6ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகளுக்கான வருடாந்த கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். சிறைச்சாலையில் சிறைச்சாலை ஆன்மீகக் குருவும் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபருமான அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு ஒதியமலை கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

கனடா மொன்றியல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகமான மீட்பின் அன்னை மறைத்தளத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகிய ஒதியமலை கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்தமாதம் 26ஆம் திகதி ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது.

அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் புனரமைப்பு பணிகளுக்காக கடந்த வருடம் ஒருதொகை நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

செயற்திறன் வகுப்பறைத் திறப்புவிழா

யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்திறன் வகுப்பறைத் திறப்புவிழா 7ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.