Month: January 2022

மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சி

இலங்கையின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அமைதி ஆய்வு நிறுவனம் (PEACE RESERCH INSTITUTE) ஓவிய போட்டி

“அமைதி, நல்லிணக்கம் மற்றும் வன்முறைகளற்ற பண்பாட்டை உருவாக்குவோம்.” என்ற கருப்பொருளில் வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் (PEACE RESERCH INSTITUTE) ஓவிய போட்டி ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளது.

‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’2025, யூபிலி ஆண்டின் மையக்கருத்து

2025, யூபிலி ஆண்டின் மையக்கருத்தான ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்ற கருப்பொருளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

கூட்டொருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் தேசிய மாநாடு

கூட்டொருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் என்ற கருப்பொருளில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான மறைமாவட்டரீதியிலான தயாரிப்புப்பணிகள் நிறைவடைந்தபின் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களும் ஒன்றிணைந்ததான தேசிய மாநாடொன்றை வருகிற ஜுன் மாதம் 14ம் திகதி பொரளையிலுள்ள அக்குவைனாஸ் உயர் கல்விக்கூடத்தில் நடத்துவதற்கான…

யாழ் மறைமாவட்டத்தின் பல இடங்களில் தமிழர் திருநாளகிய பொங்கல் பண்டிகை

யாழ் மறைமாவட்டத்தின் பல இடங்களில் தமிழர் திருநாளகிய பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. ஆலயங்கள், பொது இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி தைத்திருநாளை சிறப்பித்தார்கள்.