யாழ். வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி சுதர்சினி சுதந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. செல்லத்துரை ஸ்ரீ இராமச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.