இந்தியாவிலிருந்து வருகை தந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 170ஆவது ஆண்டு நிறைவும் சபையின் பெயர்கொண்ட திருவிழாவும் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் சபை கொடியேற்றப்பட்டு திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இந்நாளில் அருட்சகோதரிகள் தங்கள் வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டார்கள்.

By admin