மாணவர்களின் செயற்பாட்டு மற்றும் புத்தாக்க திறனை மேம்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞானபாட கண்காட்சி கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. பாஸ்கரன், விஞ்ஞான பாட வளவாளர் திரு. நக்கீரன், தமிழ்பாட வளவாளர் திரு. பீதாம்பரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இக்கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin