மட்டக்களப்பு மறைமாவட்டம் வாகரை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அலன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை கலைநிகழ்வுகளும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

அத்துடன் மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்திற்குட்பட்ட லூர்த்து அன்னைபுர சிற்றாலய திருவிழா கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin