பலாலி வளலாய் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோன் றெக்சன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை டினேசன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin