வலைப்பாடு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 58 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பலி நிறைவில் ஆயரின் குருத்துவ பொன்விழா ஞாபகமாக ஆலய வளாகத்தில் ஆயர் அவர்களால் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

By admin