வலைப்பாடு பங்கிற்குட்பட்ட புனித அன்னம்மாள், புனித அந்தோனியார், புனித சதாசகாய மாதா முன்பள்ளிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கடந்த 1,7,9ஆம் திகதிகளில் நடைபெற்றன.

முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு எனபவற்றுடன் சிறார்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் 60வரையான சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் வலைப்பாடு றோ.க.த.க பாடசாலையின் 17வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணியினர் மாகாணமட்ட போட்டிகளில் தெரிவாகி தேசியமட்ட போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin