மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தோட்டவெளி மறைசாட்சிகள் அரசி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட அன்பிய மத்திய குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை ஆராதனை, கருத்துரைகள், விளையாட்டுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 170க்கும் அதிகமான அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin