மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது.

வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 2000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதுடன் மன்னார் மறைமாவட்ட கலையருவி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ்உபகரணங்களுக்கான நிதி அனுசரணையை கனடா நாட்டின் Sleeping  Children Around the World அமைப்பு வழங்கியிருந்தார்கள்.

By admin