வட்டக்கச்சி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி, மடுத்தீனார் சிறிய குருமடம், யாழ். புனித மரியன்னை பேராலயம், யாழ்ப்பாண பொது நூலகம், இளவாலை நட்புமண் பூங்கா ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 163 மறைக்கல்வி மாணவர்களும் 25 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin