யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க சட்டவாளர் அமைப்பினருக்கான ஒன்றுகூடல் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவார்த்தை வழிபாடும் அங்கத்தவர்களுக்கான கூட்டமும் இடம்பெற்றன.

இக்கூட்டத்தில் அமைப்பின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

By admin