இறை அழைத்தலை ஊக்குவித்து மறைமாவட்ட குருக்களை உருவாக்கும் ஆரம்ப தளமாக அமைந்துள்ள யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இறை அழைப்பை இனங்கண்டு குருத்துவ வாழ்விற்கான தெரிவை மேற்கொள்ளும் தளமான இக்குருமடத்தில் உருவாக்கம்பெற விரும்பும் மாணவர்கள் பங்குத்தந்தையர்கள் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னதாக தங்கள் விண்ணப்பங்களை பங்குத்தந்தையர் ஊடாக சமர்ப்பிக்கும்படி குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin