யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கத்துடன் இணைந்த கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இக்கேட்போர் கூடத்தில் தசைப்பயிற்சி கூடம், கூடைப்பந்தாட்ட, கரப்பந்தாட்ட, டேபிள் ரெனிஸ், கரம், சதுரங்க திடல்கள், பார்வையாளர் மண்டபம் மற்றும் பரிசளிப்பு மேடை போன்றவை அமைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி நலன் விரும்பிகளென பலரும் கலந்து கொண்டனர்.

By admin