யாழ். புனித ஆரோக்கியநாதர் ஆலய வருடாந்த திருவிழா பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin