யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன.
கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து கல்லறை ஆண்டவர் திருச்சொருப முத்தியும் இடம்பெற்றன.
இத்தியான நிகழ்வுகளில் ஏராளமானவர்கள் பக்தியுடன் கலந்து செபித்தார்கள்.