கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.

14ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டியில் பங்குபற்றிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை அணி பம்பலப்பிட்டி கன்னியர் மட அணியுடன் மோதி 17 வயது பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

வடமாகாண பாடசாலை ஒன்று முதன்முறையாக தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்பாடசாலைக்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்த இம்மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன், வடமாகாண உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ராஜசீலன் மற்றும் அரச உத்தியோகத்தர்ளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin