யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா 03ஆம் சனிக்கிழமை இன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி றொகான் அவர்கள் தலைமைதாங்கி வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் 2023 ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஓய்வுநிலை பொது முகாமையாளர் கலாநிதி அபேசுந்தர அவர்கள் பிரதம விருந்தினராகவும் பாடசாலை முன்னாள் அதிபரும் திருக்குடும்ப கன்னியர் மட மாகாண ஆலோசகர் அருட்சகோதரி அன்ரனிற்றா மார்க் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin