யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் “இயற்கையோடு இணைந்த நம் வாழ்வு” எனும் தலைப்பில் ஓவியப்போட்டியும் சமாதான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஓவியப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவன இணைப்பாளர் திருமதி. சர்மினி அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலயக்கல்வி பணிப்பாளர் திரு. இரவீந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் குருநகர் புனித யாகப்பர் ஆலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட், சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை அதிபர் திருமதி.யஸ்ரின் கிறிஸ்ரபெல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin