தேசிய திருவழிபாட்டு மாநாடு வருகின்ற புரட்டாதி மாதம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஆயத்தங்கள் மறைமாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட ரீதியாக இடம்பெறும் இவ்ஆயத்த செயலமர்வு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

முல்லைதீவு மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர் அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பொன்சியன் அவர்கள் கலந்து நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள் என்னும் தலைப்பிலும் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் கலந்து நற்கருணை ஒரு கொண்டாட்டம் என்னும் தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கினார்.

தொடர்ந்து கலந்துரையாடலும் மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் தெரிவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகளென 75 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin