முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோகு நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

சிலாவத்தை தெற்கு கிராம சேவையாளர் திரு.பிறாங்கிளின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் முதியோர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைப்பிரிவின் முதியோர் மேம்பாட்டு பகுதியினரால் அமைக்கப்பட்ட
இக்கட்டடத்திற்கான காணியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் அன்பளிப்பு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin