மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முருங்கன் மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி பாசறை 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ மாணவர் இல்லத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய வழிபாடு, செய்முறை பயிற்சிகள், விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள், குழுஆய்வு என்பன இடம்பெற்றதுடன் அருட்தந்தையர்கள் ரஞ்சன் சேவியர் மற்றும் தயாளன் ஆகியோரால் அன்பியம் தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முருங்கன் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 160க்கும் அதிகமான அன்பிய பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.