மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர், முதியோர் மற்றும் தமிழ்தின விழாக்கள் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலிகாம வலய முன்னாள் கல்விப்பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி. றெஜினா இருதயநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாம வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. சுகுணராணி சண்முகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பாடசாலையின் பழைய மாணவர்களான திரு, திருமதி பாலசிங்கம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் 2022,23,24ஆம் கல்வியாண்டுகளில் பாடசாலை, கோட்ட, வலய, மாகாணமட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

கௌரவிக்கப்பட்ட மாணவர்களுள் மாணவி செல்வி அஸ்வினி செல்வக்குமார் 2ஆம் பிரிவு வாசிப்புப் போட்டியில் இவ்வருடம் மாகாணமட்டத்தில் 3ஆம் நிலையை பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin