மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
தினமும் மாலை 4:45 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 15ஆம் திகதி சனிக்கிழமை மாலை 06 மணிக்கு அன்னையின் திருச்சொருப தேர்ப்பவனியும் நற்கருணைவிழாவும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.