யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை குடும்பநல நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட், சல்வற்றோறியன் சபை அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன், செல்வி நிதினா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், குழச்செயற்பாடுகள் ஊடாக மாணவ தலைவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 40 மாணவத்தலைவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

அத்துடன் யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு வளவாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கருத்தமர்வு கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.

இக்கருத்தமர்வை குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

 

By admin