இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட மாணவதலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தில் பணியாற்றும் அருட்தந்தை ஜெராட் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் என்பவற்றின் ஊடாக நெறிப்படுத்தினார்.

இப்பயிற்சி பட்டறை நிகழ்வில் 45 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

 

By admin