விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் அனுசரணையில் அதன் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முழங்காவில் மகா வித்தியாலயம், பூநகரி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முக்கொம்பன் மகா வித்தியாலய விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin