மாங்குளம் நகரப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக திடீரென அதிகரித்து அங்குள்ள மக்களின் பயன்தரு மரங்களை சேதப்படுத்திவருவதாக அப்பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை மாங்குளம் புனித அக்னேசம்மாள் ஆலய வளாகத்திற்குள் புகுந்த யானைகள் அங்குள்ள பயன்தரு மரங்களான தென்னை, பலா, வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளதெனவும் மாங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin