மரியாயின் சேனை வெளி விழாவை முன்னிட்டு மல்வம் – உடுவில் பங்கு மரியாயின் சேனை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை கடந்த 19, 20ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மரியாயின் சேனையினர் மன்னார் மறைமாவட்டத்திற்கு யாத்திரை மேற்கொண்டு பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயம், மன்னார் மடுத்திருத்தலம், புனித செபஸ்தியார் பேராலயம், பள்ளிமுனை புனித லூசியா ஆலயம், பேசாலை வெற்றிநாயகி ஆலயம், தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயம், தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயம், பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயம் ஆகிய ஆலயங்களை தரிசித்ததுடன் மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் அருட்தந்தை றொக்ஸன் அவர்களால் நடாத்தப்பட்ட தியான உரையிலும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 16 வரையான மரியாயின் சேனை உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்.

By admin