யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆலோசனை சபைக் கூட்டம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரசாசம் அவர்களின் வழிகாட்டலுடன் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதற்கட்டமாக தரம் 01 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு விசுவாச வாழ்வு, அருட்சாதன வாழ்வு, திருவருட்சாதனங்கள், கட்டளைகள், திருவிவிலியம் ஆகிய தேர்ச்சிகளை உள்ளடக்கி பாடநூல்களை தயாரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

By admin