யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான இரண்டாவது ஆலோசனை சபைக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் மறைக்கல்வி நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு விசுவாசவாழ்வு, அருட்சாதன வாழ்வு, திருவருட்சாதனங்கள், கட்டளைகள், திருவிவிலியம் ஆகிய தேர்ச்சிகளை உள்ளடக்கி பாடநூல்களை தயாரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

By admin