வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய மற்றும் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைந்து முன்னெடுத்த பாசறை நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை எரோனியஸ் மற்றும் அருட்தந்தை டியூக்வின்சன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். திருமறைக் கலாமன்ற கலைஞர்களான ஜெகன் கரன்சன் மற்றும் பிராங் விதுசன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், தலைமைத்துவ பயிற்சிகள் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் அருட்சகோதரி யூட்சலா, மறையாசிரியர்கள், திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள், மாணவர்களென 200 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin