குளமங்கால் புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைக்கல்வி வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகையை அதிகரித்து மாணவர்கள் மறையாசிரியர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் வகுப்புக்களாக இணைந்து உணவுகளை தயாரித்து மகிழ்வு விருந்தில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களென 135 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin