யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் அகவொளி குடும்ப நல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.

அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் கலந்து நெறிப்படுத்திய இக்கருத்தமர்வில் 70 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin