இலங்கை படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா 13 வருடங்களுக்கு பின் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.

திருப்பலியை தொடர்ந்து அன்னையின் திருச்சுருப பவனி நடைபெற்றது. இந்நிகழ்வில் 500க்கும் அதிகமான கத்தோலிக்க இந்து மத மக்கள் கலந்து செபித்தனர்.

By admin