மன்னார் மறைமாவட்டம் மாந்தை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை றொக்ஸன் குருஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

 

 

By admin