மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 44ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது.

தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து நன்றித்திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான இறைமக்கள் கலந்து செபித்தனர்.

 

By admin