மன்னார் மறைமாவட்டத்தில் திருப்பாலத்துவ சபை மாணவர்களை இணைத்து பங்கு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நாடகப் போட்டி கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூகதொடர்பு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட திருப்பாலத்துவசபை இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் 19 பங்குகள் பங்குபற்றியதுடன் தலைமன்னார் பங்கு முதலாமிடத்தையும் தாழ்வுபாடு பங்கு இரண்டாமிடத்தையும் கற்கடந்தகுளம் பங்கு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin