மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

11ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin