மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தோம்மையப்பு யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை விக்ரர் பிலேந்திரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin