தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்ட இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 46 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
இவ்இரத்ததான முகாம் கடந்த 16 வருடங்களாக இங்கு நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

By admin